அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அபாயம்...!செயற்கை முடிச்சாயம்....!!


ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
டை எனும் சொல் இறப்பு எனும் சொல்லையும் குறிக்க பயன்படுகிறது, எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.
கருப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

புதன், 19 செப்டம்பர், 2012

குடும்பக்கட்டுப்பாடு

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது.இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறதுமுஸ்லிமல்லாதவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள்தொகையைப் பெருக்கி பெரும்பான்மையாகி வருகின்றனர்நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர்.


இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும்.மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பதை முதலில் பார்ப்போம்.
வறுமையும் உணவுப் பற்றாக்குறையும் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த கால கட்டங்களிலும் உலகெங்கும் இருந்துள்ளனஇன்று உலகில் வாழும் மக்கள் தொகையை 500 கோடியிலிருந்து வெறும் ஐந்து கோடியாகக் குறைத்தாலும் வயிற்றுக்கு உணவு கிடைக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்இதுதான் எதார்த்த நிலையாகும்.
மக்கள் தொகை குறைவாகவே இருந்த காலத்திலும் மக்கள் தொகை மிகுதியாக உள்ள காலத்திலும் மக்கள் அனைவரின் தேவைகளுக்கும் அதிகமாகவே உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனஇன்று 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000கோடி மக்களுக்குப் போதுமான உணவுகள் உலகில் உள்ளனஉணவுப் பொருள்கள் சிலருக்குக் கிடைக்காமல் போவதற்குக் காரணம் விநியோக முறையில் ஏற்படும் தவறுகளும்பலருக்குப் போதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான்ஏழை நாடுகள் உணவுக்காக அலை மோதும் போது பணக்கார நாடுகள் உணவுப் பொருள்களைக் கடலில் கொட்டுவதை நாம் பார்க்கிறோம்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

MSG....?(அஜினோமோட்டோ)எச்சரிக்கை....!


நீங்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக குட்கா, அபின் போன்ற போதைப்பொருளை, உணவில் சேர்த்து சாப்பிட விரும்புவீர்களா? பாக்கெட் உணவுகளை அதிகம் ருசிப்பவரா? தாகம் எடுக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை உடைத்து "மொடக்"குபவரா?
வேண்டாமே, இந்த விபரீதம், நாம் அமெரிக்காவை போல உயரலாம், அதற்காக, அவர்கள் "கேடுகெட்ட" உணவுப் பழக்கத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா? மிளகிலும், சுக்கிலும், திப்பிலியிலும் அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று அவர்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் விட்டொழித்த "டப்பா" உணவுகளை நாம் ஏதோ ஆசைக்கு வாங்கி சாப்பிடலாம். அதற்காக வாழ்க்கையே டப்பா உணவாகி விடலாமா? நாம் சமையல் அறைகள் என்ன ரசாயன தொழிற்கூடமா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எல்லாம் நமக்கு அவசியம் தானா?நாம் இதையெல்லாம் யோசிக்க மறுக்கிறோம்?
* நாம் சமையலில் பயன்படுத்தும் பல பாக்கெட் சமாச்சாரங்களிலும்  "ப்ளேவர்" கூட்டும் ரசாயனங்கள் இல்லாமல் இல்லை.
* நம்மில் சிலர் பயன்படுத்தும் "டேஸ்ட்" தருவதற்கான அஜினோமோட்டோவில் கூட முழுக்க ரசாயனம் தான். அதை பயன்படுத்தி வந்த சீனர்களும், அமெரிக்கர்களும் அதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆம், நாம் எப்போது உலகமயமாக்கலில் மூழ்கி விட்டோமோ, அப்போதே நம் வாழ்க்கையில் சர்வதேசத்தனம் ஊடுருவத் துவங்கிவிட்டது.பாக்கெட் உணவுகளால் ஆபத்தில்லை. ஆனால், நாம் அதிக அளவில் அதை பின்பற்றக்கூடாது.பலரும் அதிலேயே மூழ்கி விட்டது தான் ஆபத்து தருவதாகும்.
அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் எம்.எஸ்.ஜி., என்பது தான். மோனோ சோடியம் க்ளூட்டாமேட் (MSG -Mono Sodium Glutamate) என்பது தான் இதன் முழு ரசாயனப்பெயர். கெச்சப்பாகட்டும்(ketchup), மஷ்ரூம் அயிட்டங்களாகட்டும், சிக்கன் சமாச்சாரங்களாகட்டும் எதிலும், இந்த எம்.எஸ்.ஜி., இருக்கும். நம்மூர் சோடா உப்பு போல் தான். இந்த எம்.எஸ்.ஜி., நம்மில் அஜினோமோட்டோ என்று பிராண்ட் பெயரில் அழைக்கப்படுகிறது.

திங்கள், 17 செப்டம்பர், 2012

சென்னை ஸ்தம்பித்தது , அமெரிக்க தூதரகம் அதிர்ந்தது!


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் 15.09.2012 அன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.
பெண்கள் துடப்பகட்டை, செருப்பு, சானி கரைசல் உடன் வந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் கொந்தளிப்பில் குழுமி இருந்தாலும் எந்தவித சிறிய அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பை வெளிப்படுத்தி காவல்துறையினரை ஆச்சிரியத்தில் ஆழ்தியது.
சென்னை நகரமே முற்றுகையினால் பல மணி நேரம் ஸ்தம்பித்து போனது.  போராட்டம் முடிந்த பிறகும் கூட கோபத்தை அடக்க முடியாத முஸ்லிம்கள் கலைந்து செல்லாமல் போராட்ட கலத்திலேயே பல மணி நேரம் தொடர்ந்து இருந்தனர்.
ஒபாமா, ஹிலாரி , பாதிரியார் ஆகியோரின் உருவப்படங்களை முஸ்லிம்கள்  கிழித்து எரிந்தனர்.  மேலும் செருப்பால் அடித்து சானியை தெளித்து ,காரி உமிழ்நதனர்.
கைது செய்ய வேண்டிய காவல்துறை வழக்கம் போல் எங்களால் இந்த கூட்டத்தை கைது செய்ய இயலாது அந்த அளவிற்கு சென்னையில் எங்கும் வசதி இல்லை எனக் கூறி கலைந்து செல்லுமாறு தெரிவித்தது.
ANI,  CNN IBN உள்ளிட்ட international media க்கள் போராட்ட கலத்திற்கு காலையிலயே வந்து என்ன நடக்க போகின்றது என காத்திருந்தது குறிப்பிடதக்கது.

புதன், 12 செப்டம்பர், 2012

கண்களை கவனியுங்கள்....!

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ(A) மற்றும் வைட்டமின் சி(C)யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள 
மேகுலா (macula)-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -2)


வரலாற்றுச் சுருக்கம்

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பிறந்தார்கள்.குலப் பெருமையையும்சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்என்னும் குலத்தில் பிறந்தார்கள்.தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும்தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து அனாதையாக நின்றார்கள்.பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும்அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான கூலிக்காக ஆடு மேய்த்தார்கள்ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன்சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள்இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லைஎழுதவோ,படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள்மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும்பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார்நபிகள் நாயகத்தின் ஒழுக்கம்பண்பாடுநேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார்.நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும்விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மணந்து கொண்டார்கள்.இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.

புதன், 5 செப்டம்பர், 2012

பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம், ஆயங்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக அல் அக்ஸா பெண்கள் மதரஸாவில் கடந்த ஞாயிறு (02.09.2012) அன்று பெண்களுக்கான பயான் மதியம் 3.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற்றது.தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் இன்றைய பெண்களின் நிலை ஆகிய தலைப்புகளில் உரையாற்றப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்.