அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 31 அக்டோபர், 2012

ஹஜ்ஜுப் பெருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் பேரருளால் 27.10.2012 அன்று 
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயங்குடி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.ஆண்கள் பள்ளிவாசல் சாலையிலும் பெண்கள் பள்ளியின் வெளி வராந்தாவிலும் தங்கள் தொழுகையை நிறைவேற்றினர்.

14 மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது, சுமார் ஏழை 100 மக்களுக்கும் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....!




















வெள்ளி, 5 அக்டோபர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -3)


சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்ததுஅவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள்ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம். 
ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரணமாகவே மக்கள் கட்டுப்படுவார்கள்முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள்மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள்ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும்அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும்நாட்டையே ஆளும்தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால்ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.
இதனால்நபிகள் நாயகத்தின் நடைஉடைபாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பெற்றிருந்தார்கள்.கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும்அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?