அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 14 அக்டோபர், 2011

இந்த மாதம் மக்கள் தொகை 700 கோடியை எட்டும்: ஐ.நா சபை

இந்த மாதம் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியை தொடும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் பிறக்கும் 700 கோடியாவது குழந்தையை வரவேற்க உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
தினமும் சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை எங்கு பிறக்கும் என்பது தெரியாது. எனினும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கத்தில் 31ம் தேதி பிறக்கும் ஒரு பெண் குழந்தைக்கு 700 கோடியாவது குழந்தை என்று பிறப்பு சான்றிதழ் வழங்க பிளான் இன்டர்நேஷனல் திட்டமிட்டுள்ளது.
உலக மக்கள் தொகை கடந்த 1805ம் ஆண்டு 100 கோடியை எட்டியது.