மகத்தான படைப்பாளனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
(முஹம்மதே) தமது
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும்
நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது.
அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக்
கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட
பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர
மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்
கொள்ளட்டும்.
இன்றைய நவநாகரீக
உலகில், பெண்கள் கற்பழிக்கப்படுவதும், அவர்கள் மீது பாலியல்ரீதியாக
தொந்தரவுகள் கொடுக்கப்படுவதும் என்றுமில்லாமல் அதிகரித்துள்ளது. அதுவும்
பெண்களை போற்றும் இந்திய திருநாட்டில் இத்தகைய குற்றங்கள் பல்கிப்
பெருகிவிட்டதைக் கண்டு நேர்மையாளர்கள் பலரும் மனவேதனை அடைந்து
வருகின்றனர்.
ஆணும் பெண்ணும்
கலந்து வாழும் சமூக அமைப்பில் எப்படிப்பட்ட வரம்புகளுக்குட்பட்டு வாழ
வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கறையற்றவர்களாக மனித சமுதாயம் இருந்து
வருவதால்தான் கேடுகெட்ட ஒழுக்கச்சிதைவுகள் ஏற்பட்டு, மிருகத்தைவிட கேவலமாக
நடந்துக் கொள்கின்றனர்.
ஒரு பெண்,தான்
ஒரு பட்டதாரியாக வேண்டும்,நல்ல கல்வி கற்க வேண்டும் என்பதற்காக
கல்விச்சாலையைத் தேடிச் செல்லும் போது, கல்விச்சாலைகளிலும், பல்கலைக்
கழகங்களிலும் பாலியல் வன்முறைக்கு இலக்காகிறாள். தன்னுடன் பயிலும் சக
மாணவர்களின் ஈவு இரக்கமற்ற ஈவ்டீசிங் என்கிற பாலியல் சேட்டைகளை தாங்கிக்
கொள்ள இயலாமல் தற்கொலையும் செய்துக் கொள்கிறாள்.இது ஏதோ ஒன்றோ இரண்டோ
அல்ல.ஏராளமான சம்பவங்களை ஆதாரங்களாக காட்ட முடியும்.
அதேபோல் குரு
என்கிற உன்னத ஸ்தானத்தில் இருந்து, மாணவ,மாணவிகளை நல்ல எதிர்கால சந்ததிகளாக
மாற்றி, வளமான தலைமுறைகளை உருவாக்கும் பணியில் இருக்கும் ஆசிரியர்களும்,
பள்ளி நிர்வாகிகளும், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வதும்,
கற்பழிப்பதும் தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது.
அதுமட்டுமின்றி,
பாலகர்களாக இருக்கும் 3வயது, 4 வயது மழலைகள் கூட ஆசிரியர்களால்
வன்புணர்ச்சி செய்யப்படுவதும் மனிதநாகரிகம் மேம்பட்டதாகச் சொல்லப்படும்
இந்த நூற்றாண்டில் நம் கண்முன் நடக்கும் வேதனைகளாகும். இத்தகைய
மனிதமிருகங்களுக்கு என்ன தண்டனைகள் வழங்கப்பட்டன, சட்டம் அவர்களை என்ன
செய்தது என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் கண் துடைப்பு நாடகங்கள்
அரங்கேறுவதையே நாம் காண முடியும்.மேலும் தன்னுடைய
குடும்பசூழ்நிலையை கருதி, தகப்பன், சகோதரன், கணவன் இவர்களின்
கஷ்டங்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் வேலைக்குச்
செல்லும் பெண்கள், அங்கு பணியாற்றும் வக்கிரபுத்தி படைத்த மேலாளர் மற்றும்
சக பணியாளர்களின்; பாலியல் தொந்தரவுகளுக்கும் காமப் பசிக்கும் நிர்பந்தமாக
இரையாவதும், அதனை வெளியில் சொல்ல முடியாமல் மனம்புழுங்கி தங்களுக்குள்
குமைந்து வாழ்வதும்; எழுத்தில் வடிக்க இயலாத வேதனைகளாகும்.
அதேபோல்
பேருந்துகளிலும், இரயில்களிலும், கடைத் தெருக்களிலும் பெண்கள் பாலியல்
வக்கிரத்துக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி தினம் தினம் செத்து மடிகின்றனர்.
புதுடில்லியில்
மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பேருந்தில் மனித மிருகங்களால் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு நாசப்படுத்தப்பட்ட அதிர்வலைகள், தூத்துக்குடி
மாவட்டத்தில் 3 மாணவிகள் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி
சம்பவம், சென்னையில் 15 வயது மாணவி கடத்தப்பட்டு, கட்டாய தாலி கட்டப்பட்டு,
பலாத்காரப்படுத்தப்பட்டது, திரிபுரா மாநிலத்தில் பிஷால்கர் எனுமிடத்தில்
வீட்டில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் கற்பழித்து, மக்கள் முன்னிலையில்
நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்த கொடுமை, மும்பையில் தன் கணவனை தேடி
வந்த நேபாள