அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 16 மே, 2013

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
நக்சலைட் வன்முறைகளால் பாதிக் கப்பட்ட பகுதிகள், மலைப் பிரதேசங் கள் ஆகியவற்றில் வீடு கட்டுவதற்கு, 48,500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகை, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த் தப்பட்டுள்ளது. வீடில்லாத ஏழை களுக்கு, வீடு கட்டுவதற்கு இடம் வாங்குவதற்காக, ஒரு நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், மாநில அரசு கள் மூலம், வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை, 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. - இவ்வாறு, ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

நன்றி :viduthalai






0 கருத்துகள்:

கருத்துரையிடுக