அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 6 ஜூன், 2011

வெள்ளரிக்காய்க்கு ஐக்கிய அரபு நாடுகள் தடை

ஐரோப்பா நாடுகளில் இருந்து வெள்ளரிக்காய் இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய அரபு நாடுகள் தடைவிதித்துள்ளது.

ஸ்பெயினிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இ-கொயில் வெள்ளரிக்காயை உட்கொண்டதனால் அந்நாட்டில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 1,150 பேர் இ-கொயில் நோயினால் பாதிப்படைந்துள்ளதாக ஜெர்மன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளரிக்காயில் இ.கோலி வகை பாக்க்டீரியா இருப்பதால், மேற்கண்ட நாடுகளிலிருந்து வெள்ளரிக்காயை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு நாடுகள் தடை விதித்துள்ளன.

வளைகுடா நாடுகளின் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் இத்தடையை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றால், அங்கு காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வளைகுடா நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி : tamilwebdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக