அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று இணையதளத்தில் வெளியீடு!

பத்தாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

வரும் ஜூன் மாதம் துவங்கும் கல்வி ஆண்டில், இதர வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பின் அனைத்து பாடங்களுக்கும், சமச்சீர் கல்வியின் அடிப்படையில், தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப் புத்தகங்கள், இணைய தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதன்படி, பத்தாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் www.pallikalvi.in   இன்று வெளியிடப்படுகிறது.
 
Thanks : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) - பரங்கிப்பேட்டை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக