அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 25 ஜூலை, 2011

இறைநேசர்கள் யார்? (பகுதி-1)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  
இறைநேசர்கள் என்ற சொல்லுக்கான விளக்கம்

இறைநேசர்கள் அதாவது இறை (+) நேசர்கள் இறைவன் யாரை நேசிக் கிறானோ அவரே இறைநேசராக இருப்பார்.

இறைவன் யாரை நேசிக்கிறான், யாரை நேசிப்பதாக கூறுகிறான் என்பதை அறிந்துக்கொள்வது பற்றி அவனே தெளிவுபட அருள்மறை குர்ஆனில் கூறியிருக்கிறான்! மேலும் அல்லாஹ் யாரை குறிப்பிட்டு இவர் அவ்லியா என்று கூறவில்லையோ அவர்களை நாம் அவ்லியாவாக கருதமுடியாது! அப்படி நாம் கருதினால் நாம் அல்லாஹ்வின் மீது நாம் பொய்யை இட்டுக்கட்டிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம் இதை உணரவேண்டாமா?


சிலர் தர்காஹ்-கப்ருகளில் இருக்கும் இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைநேசர்கள் என்றும் வாய்கூசாமல் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதற்கான ஆதாரத்தை முன்வைக்கவேண்டும்! மேலும் இவ்வாறு பொய் கூறுபவர்கள் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா?

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)

 
இறைநேசர்கள் பற்றிய நபிமொழி

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். “.(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

இங்கு நபிகளார் அறிவிக்கும் அல்லாஹ்வின் அடியார்களின் சிறப்புகளை பாருங்கள்!


அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடம் நட்பு கொள்வர்!

இங்கு கவனிக்க வேண்டியது இரண்டு விசயங்கள்
1)      அல்லாஹ்வின் பொருத்தம்

2)      அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக நட்பு கொள்வது

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

ஸஹாபாக்களில் ஒருசிலரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)

இந்த இறைவசனத்தில் அல்லாஹ் பொறுந்திக்கொண்ட அடியார்களைப் பற்றி மிக அழகாக கூறுகிறான் ஆனால் அவ்வாறு  கூறும் போது யாருடைய பெயரையும் வெளியிடாமல் ரத்தினச் சுருக்கமாக படிப்பவர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பொடி வைத்து பேசுகிறான்!

முதலாவதாக ஹிஜரத் செய்த அனைவரிலும் அவர்களின் ஒரு பகுதியினரை பொருந்திக்கொண்டதாக கூறகிறான்!

· இரண்டாவதாக அன்சாரிகளில் ஒரு பகுதியினரை பொருந்திக் கொண்டதாக கூறகிறான்!

· மூன்றாவதாக அன்சாரிகளில் முந்திச் சென்ற முதலாமவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!

· நான்காவதாக நல்ல விஷயத்தில் இந்த 3 வகையான கூட்டத்தாரை பின்தொடர்ந்தவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!


தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் வாக்களிக்கும் இந்த நபர்களுக்கு சொர்க்கச் சோலைகள் அளிப்பதாக உறுதிமொழி அளிக்கிறான் இந்த வசனத்தின் மூலம் இவர்கள் நல்லடியார்கள் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்பதும் இதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான் என்பதும் தெளிவுபட விளங்குகிறது (சுப்ஹானல்லாஹ்)! இவர்களை நாம் பின்தொடர வேண்டுமே தவிர வழிபடக்கூடாது காரணம் பின்தொடர்ந்த வர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது மேலும் இவர்களின் நல்ல செயல்களை நாமும் அவ்வாறு பின்தொடர வேண்டும் என்று அல்லாஹ் மறைமுகமாக போதிக்கிறான்!

நன்றி : islamicparadise

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக