அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 16 மே, 2013

ஜூன் 17ல் என்ஜீனியரிங் கவுன்சிலிங்

சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி ஜூன் 17முதல் தொடங்குகிறது. முதலில் விளையாட்டு பிரிவினருக்கு ஜுன் 17 முதல் ஜூன் 19 வரை கலந்தாய்வு நடைபெறும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் எனப்படும் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப மனுக்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும். சி.பி.எஸ்.இ மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் தர வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜுன் 12-ல் வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் தொடங்கும் எனவும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 11 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைத்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி புதிதாக உறுப்பு கல்லூரியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளனர்.
 
நன்றி:thatstamil 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக