அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 15 டிசம்பர், 2011

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தவறு செய்யும் எம்.பி.க்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல்

கடுமையான தவறு இழைக்கும் இங்கிலாந்து எம்.பி.க்களை திரும்பப்

பெறும் உரிமையை அளிப்பதற்கான வரைவு மசோதா, இங்கிலாந்து

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை

பாராளுமன்றம் பரிசீலித்து ஒப்புதல் அளித்தால், இந்த சட்டம் அமலுக்கு

வரும். இதன்படி, ஒரு வருடத்துக்கும் குறைவான ஜெயில் தண்டனை

பெற்றாலும், அத்தகைய எம்.பி. கடுமையான குற்றம் இழைத்ததாக

கருதப்படும். அந்த எம்.பி.க்கு எதிராக அவரது தொகுதி வாக்காளர்களில் 10

சதவீதம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால், அந்த எம்.பி. பதவி இழக்க

வேண்டி இருக்கும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

நன்றி : தாளம் நியூஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக