அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 9 ஜூன், 2011

ஆஸ்திரேலிய ஆழ் கடலில் எரிமலை

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிர் பொருட்கள் கூடிய எரிமலை ஒன்று ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் .
கிரேட் ஆஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு பகுதி என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது கடலுகடியிலிருந்து 200 மீட்டர் மேலெழும்பி உள்ளது எனபது குறுப்பிடத்தக்கது. இது தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் ஆனால் இதில் உயிர் பொருட்கள் நிறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர் .

சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடிங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும் , இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது என்றும் , இப்பகுதியில் எரிமலைகள் நிரந்து இருபினும் இந்த எரிமலை எந்த வித மனித தொந்தரவுகளும் இல்லாமல் இருபதே இதன் தனி சிறப்பு , இதனாலேயே இதன் உயிர்த்தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மீண்டும் பயணம் செய்து அங்கு உயிர் வாழும் உயிரிகள், தாவரங்கள் மற்றும் உயிர் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து மேலும் பல ஆராய்சிகள் மேற்கொண்டு இப்பகுதியின் உயிர்பரவல் எத்தகையது என்பதை கண்டறிவோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நன்றி : thalaippu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக