அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 9 ஜூன், 2011

டென்மார்க்கில் கோழி இறைச்சியிலும் இ.கோலி

மரக்கறி வகைகளில் மோசமான இ.கோலி பக்டீரியா பரவியுள்ளதால் ஏற்பட்ட பாதிப்பு அடங்கும் முன்னர் டென்மார்க்கில் கோழி இறைச்சியிலும் இந்த வகை பக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரிய அதிர்வுகள் இன்னும் ஏற்படவில்லை என்றாலும் இத்தகவல் குறித்த எச்சரிக்கை வேண்டும் என்று டியுரி ஆய்வகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோழிகளிலும் கோழி இறைச்சிகளிலும் சுமார் 200 வகையான பரிசோதனைகளை செய்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் கோழி இறைச்சிகளிலேயே பக்டீரியா தாக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது.இப்போது தான் டெனிஸ் இறைச்சியில் இ.கோலி பக்டீரியா இருப்பதாக பரிசோதனையாளர்கள் கூறுகிறார்கள்.

27 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்ட பின்னரே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : newsonews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக